பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனை கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார். இதுவரை 5 பாகங்களாக வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவல் இந்நூலில் 5 பாகங்களும் ஒரே தொகுதியாக பல வண்ணபடங்களுடன் புதிய வரவாக வந்துள்ளது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபொன்னியின் செல்வன் 1 to 5
எழுத்தாளர்கல்கி
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
பக்கங்கள்1056
முதல் பதிப்பு2011
தற்போதைய பதிப்பு2011
பதிப்பு1
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பொன்னியின் செல்வன் 5 பாகங்களும்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
கல்கி எழுதிய நூல்கள்












