தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று சீவக சிந்தாமணி. ஒரு காப்பியத்திற்குரிய விரிவு சீவக சிந்தாமணியிலேயே காணக்கிடைக்கிறது. காவியச்சுவை என்பது சுருக்கமாகச் சொன்னால் ஒரு மொழியின் அழகின் அனைத்து முகங்களும் வெளிப்படும் நிலையே. தமிழில் கம்பராமாயணமும் சீவகசிந்தாமணியும் மட்டுமே அந்தத் தகுதி கொண்ட மாபெரும் காப்பியங்கள். சீவகன் என்ற மன்னன் தன் வீரத்த்தாலும் கொடையாலும் அழகாலும் பெறும் லௌகீகச்சிறப்புகளும், இறுதியில்அவற்றை அவன் துறந்து அறிவர் அடிசேர்ந்து பெறும் முக்தியும் மட்டுமே இக்காப்பியம். சீவகசிந்தாமணி சமண காப்பியம், சீவக சிந்தாமணியை அதன் மொழியின் பேரழகுக்காக மட்டுமே வாசிக்க வேண்டும். வர்ணனைகளிலும் சொல்லாட்சியிலும் செறிந்துள்ள நுட்பங்கள் தமிழைச் சுவைக்கத்தெரிந்தவர்களுக்கு தீராத விருந்தாக அமையக்கூடியவை. அத்துடன் இது சமண மதத்தின் அடிப்படைக்கோட்பாடுகளை அறிந்துகொள்வதற்கான மூலநூலும்கூட.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புசீவகசிந்தாமணி விளக்கவுரை ஆறாம் பகுதி
எழுத்தாளர்துரை இராசாரம்
கட்டுPaper Back
முதல் பதிப்பு2001
தற்போதைய பதிப்பு2010
பக்கங்கள்328
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
சீவகசிந்தாமணி விளக்கவுரை ஆறாம் பகுதி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
துரை இராசாரம் எழுதிய நூல்கள்













