தமிழகத்தின் வற்றாத நதி என்று ஒன்று உண்டெனில் அது தாமிரபரணி என்னும் பொருநை நதியே. சங்ககாலம் முதலேயே பொருநை பற்றிய குறிப்பு இலக்கியங்களில் காணப்படுகிறது. தாமிரபரணி தோன்றும் பொதிகை மலை புராண காலத்துடன் தொடர்புடையது. கைலயங்கிரியில் சிவபெருமான் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டபோது இமயமலை தாழ்ந்து குமரி முனை உயர்ந்ததாகவும் அதைச் சமன் செய்ய சிவன் அகத்திய முனிவரைப் பொதிகை மலைக்கு அனுப்பியதாகப் புராணம் கூறும். அகத்தியர் பொதிகையில் தங்கித் தமிழ் வளர்த்ததாகவும் சித்தராக அவர் வாழ்ந்ததாகவும் கூறுவர். எனவே தாமிரபரணிக்கரைச் சித்தர்களுள் முதல் சித்தரும் தலையாய சித்தரும் அகத்தியர் ஆவர். அவர் வழியில் பொதிகைமலையில் காலங்காலமாக எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்தனர். இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு திருநெல்வேலி மாவட்டத்து வரலாற்றினை விவரிக்கிறது இந்நூல்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதாமிரபரணிக்கரைச் சித்தர்கள்
எழுத்தாளர்முத்தாலங்குறிச்சி காமராசு
கட்டுHard Binding
தற்போதைய பதிப்பு2009
பக்கங்கள்232
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தாமிரபரணிக்கரைச் சித்தர்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

