திருக்குறளை பரிமேலழகர் எழுதியுள்ள உரையை உடன் வைத்துப் படித்தல் அவசியம். ஏனெனில், குறளுக்கு நிகரான பொருட்செறிவு உடையது அவர் உரை. பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபுரம், மதுரை, ஒக்கூர் போன்ற வெவ்வேறு இடங்களைப் பலர் குறிப்பிட்டுள்ளனர். இவரது காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். எனினும் இது குறித்துச் சரியான தகவல்கள் கிடையாது. இவரது உரையில் முன்னவர்களது உரைகள் தொடர்பான குறிப்புக்களும் காணப்படுகின்றன. இவர் தமது உரையில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும் அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் அழகாகக் கூறியுள்ளார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதிருக்குறள் பரிமேலழகர் உரை
எழுத்தாளர்புலியூர்க் கேசிகன்
கட்டுHard binding
முதல் பதிப்புAug, 1998
தற்போதைய பதிப்புAug, 2010
பக்கங்கள்623
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
திருக்குறள் பரிமேலழகர் உரை
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
புலியூர்க் கேசிகன் எழுதிய நூல்கள்







