திரு.வி. கலியாண சுந்தரனார் செங்கற்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் 1883 ஆகஸ்ட் மாதம் 26 அன்று தம் பெற்றோருக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவருடைய வாழ்க்கைக் குறிப்புக்களில் “பிறப்பு வேண்டும், அப்பிறப்பு பயன் கருதாத தொண்டுக்குப் பயன்படுதல் வேண்டும்” என்று கருதுவதாகக் கூறியுள்ளார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி விருத்தாசல முதலியார் சென்னை ராயப்பேட்டைக்குக் குடியேறினார். (1890) திரு.வி.க.வின் கல்வியும் ராயப்பேட்டையிலேயே தொடங்கிற்று. வெஸ்லி கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து ந. கதிரைவேற் பிள்ளை அவர்களிடம் தமிழ் பயின்றார். பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை அமைக்கப்பட்டது. கதிரைவேற் பிள்ளை தீவிர சைவ சித்தாந்தவாதி. தமிழை ஆழ்ந்து பயின்றவர். ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர். இவருடைய செல்வாக்கின் கீழ்த் தமிழ் கற்ற கலியாண சுந்தரனார் இயல்பாகவே சைவசிந்தாந்தத்தின் பால் ஈடுபாடு கொண்டார். இளம் பருவத்தில் அவரே சொல்வதுபோல “உடல் தடித்தவன்” மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தந்ததில்லை. சைவத்துக்கு எதிரான கருத்துக்களை ஆதரித்ததும் இல்லை.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதிரு.வி.க.வின் சைவ சொற்பொழிவுகள்
எழுத்தாளர்தமிழ்த்தெண்றல் திரு.வி.க.
கட்டுHard binding
முதல் பதிப்புAug, 2003
பக்கங்கள்156
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
திரு.வி.க.வின் சைவ சொற்பொழிவுகள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
தமிழ்த்தெண்றல் திரு.வி.க. எழுதிய நூல்கள்







