தினத்தந்தியில் 40 ஆண்டுகள் செய்தி ஆசிரியராய் இருந்தவர்; புதின எழுத்தாளர்; வரலாற்று நூலாசிரியர் மனிதநேயம் மிக்க பண்பாளர் எனப் பன்முக நாதனாய் விளங்குபவர், ஐ. சண்முகநாதன்.“ஒரு தமிழன் பார்வையில் 20ஆம் நூற்றாண்டு’’ என்ற நூலில் மூலம் ஏற்கனவே இவர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்போது கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்வரை உலக வரலாறு என்ற புதிய நூலைப் படைத்துள்ளார். உலகம், இந்தியா, தமிழ்நாடு என 3 பகுதிகளாக இந்நூல் விரிந்துள்ளது. வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்கள், சம்பவங்கள், நாடுகளைப் பற்றி எளிய நடையில் கதைபோல் விவரிக்கிறார் நூலாசிரியர். “மாவீரன் நெப்போலியன் சிறைவைக்கப் பட்ட ஹெலீனாத்தீவின் நீளம் 15கி.மீ அகலம் 10கி.மீ என்ற செய்தியை வாசிக்கும்போது அந்த மாமன்னன் ஆண்டது எத்தனை பெரிய நிலம், மாண்டது எத்தனை சிறிய நிலம் என்று அனுதாபத்தால் உச்சுக்கொட்டுகிறது உதடு.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஉலக வரலாறு
எழுத்தாளர்ஐ.சண்முகநாதன்
கட்டுHard binding
முதல் பதிப்புAug, 2003
தற்போதைய பதிப்புFeb, 2009
பக்கங்கள்448
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
உலக வரலாறு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
ஐ.சண்முகநாதன் எழுதிய நூல்கள்




